விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் ஜெனரல் தேசமான்ய டெனிஸ் பெரேரா அவரக்ளின் நினைவுதின நிகழ்வில் உரை நிகழ்தினார்.
10:13am on Tuesday 27th August 2019
முப்படை  சிரேஷ்ட ஓய்வுபெற்ற  அதிகாரிகள்  சங்கம் ஏற்பாட்டில் 07வது முறையாக   நடத்தப்பட்ட ஜெனரல் தேசமான்ய   டெனிஸ் பெரேரா அவரக்ளின் நினைவுதின நிகழ்வு கடந்த 2019 ஆகஸ்ட் 11 ம் திகதி கொத்தளாவள  பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது இதன்போது  விமானப்படை தளபதி தேய்ரா மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  நினைவு தின உரை நிகழ்த்தினார்.

விமானப்படை தளபதி அவர்களினால்  "தேசிய ஒற்றுமையை உறுதி செய்யும் போது ஏற்படும் புதிய அச்சுறுத்தல் பரிமாணங்களை எதிர்கொள்வதில் பாதுகாப்பு முகாமைகளின்  பங்கு" என்ற தலைப்பில் நினைவு சொற்பொழிவு நடைபெற்றது.

இதன்போது முப்படை தளபதிகள் மற்றும் முப்படை ஓய்வு பெட்ரா அதிகாரிகள்  உட்பட  இந்த  நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.

மறைந்த  ஜெனரல் தேசமான்ய   டெனிஸ் பெரேரா அவர்கள்  சாந்தா பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவர்  அவர் 1977 தொடக்கம் 1981 வரையான காலப்பகுதியில் இராணுவ தளபதியாக கடமைபுரிந்தார். இறுதியாக அவர் அவுஸ்திரேலிய  தூதுவராக கடமையாற்றினார். அதன்பின்பு கொத்தளாவள பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்  வேந்தராக பொறுப்பேற்றார் .நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் அவர் ஆற்றிய பணிக்காக  2000 ம் ஆண்டு அவருக்கு தேசமான்ய கௌரவ விருது வழங்கிவைக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை