2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை ரத்மலான விமானப்படை தளத்தில்.
6:40pm on Tuesday 29th October 2019
ரத்மலான   விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை.

நிகழ்வு கடந்த 2019அக்டோபர் 11  ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்   இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக    ரத்மலான  விமானப்படை   கட்டளை எயார் கொமாண்டர்  சம்பத் விக்ரமரத்ன  அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால்   பரீட்சனை  அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால் சிறப்பாக சேவை படை வீர்ரகள்  சிவில் ஊழியர்களுக்கான விமானப்படை தளபதி விருதும் வழங்கி வைக்கப்பட்டது அவர்களுடைய (பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்)

அதன்பின்பு தளபதி அவர்களால்  அனைத்து பிரதேசமும் பார்வையிடப்பட்டது இதன்போது  மேலும் குறிப்பாக பிரிவுகளின் தரங்களை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் உள்ள முயற்சி மற்றும் கடின உழைப்பைப் பாராட்டினார்.

இறுதியாக  அனைவருக்கும் முன்னிலையில் உரைநிகழ்திய தளபதி அவர்கள்  ராயல் விமானப்படையால் நிறுவப்பட்டதிலிருந்து இலங்கை  விமானப்படையின்  முக்கிய தளங்களில் ஒன்றான இந்த தளத்தின் பரிணாமம் பற்றியூம்  நினைவுபடுத்திய அவர் . மேலும்,இந்த வருடம்  ஏப்ரல் 21,ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயல்புநிலைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்காக அனைத்து அதிகாரிகள் மற்றும் தளத்தின் பணியாளர்கள் ஆற்றிய சேவைகளையும் அவர் பாராட்டினார் .
 
 மேலும், தளபதி அவர்கள் தனிப்பட்ட ஒழுக்கத்தைப் பேணுதல், உயர் மட்ட நட்பை  பேணுதல் மற்றும் சிவில் மற்றும் விமானப்படை சட்டங்களால் வழங்கப்பட்ட கட்டளைகளை கடைப்பிடிப்பதன்  முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இறுதியாக தளபதி அவர்கள் அணைத்து பொது  நிலை  பகல்போசன நிகழ்வில் கலந்துகொண்டு  விடைபெற்றார் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை