விமானப்படை தளபதி அவர்களுக்கு நாளாந்த கல்லூரியினால் பாராட்டு நிகழ்வு.
7:22am on Tuesday 12th November 2019
கொழும்பு  நாளந்தா  கல்லூரியின் வருடாந்தபரிசளிப்பு விழாவில்   நாளந்தா  கல்லூரியின்  அதியுயர் கௌரவ  விருதான  " நாளந்த கீர்த்தி ஸ்ரீ விருது " இலங்கை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள  டயஸ் அவர்களுக்கு  கடந்த 2019 அக்டோபர் 31ம் திகதி  நாளந்தா  கல்லூரியின் மலலசேகர அரங்கில்  வைத்து வழங்கப்பட்டது.

" நாளந்த கீர்த்தி ஸ்ரீ விருது "  தமது தொழில்துறையில்  சிறந்து விளங்கும்  பழைய  நாளந்தா கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்படும்  விசேட விருதாகும் .இந்த விருது வழங்கும் விழாவை நாலந்தா பழைய சாரணர் சங்கம் நாலந்தா கல்லூரியின் முதன்மை ஊழியர்கள் மற்றும் தற்போதைய மாணவர் அமைப்பின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்நிகழ்ச்சியை பிரதம விருந்தினராக உவா வெல்லாசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி. ஜெயந்த லால் ரத்னசேகர கலந்து கொண்டார்.  இந்த விருதை நாலந்தா கல்லூரி முதல்வர் திரு. திலக் வாதுவேவா வழங்கிவைத்தார் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை