இலங்கை விமானப்படை தேனீ வளர்ப்பு திட்டம்.
7:26am on Tuesday 12th November 2019
இலங்கை  விமானப்படை தளபதி அவர்களின் அறிவுரைப்படி  இலங்கை விமானப்படையின்  தேனீ வளர்ப்பு  திட்டத்தை  மேன்மைப்படுத்தல் மற்றும் பயிற்சிநெறிதிட்டம் ஓன்று  கடந்த 2019 நவம்பர்  02 ம் திகதி   கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இடம்பெற்றது .

இத நிகழ்வில்  விமானப்படை  சார்பாக  அனைத்து [படைத்தளங்களிலும் இருந்து சுமார் 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

நிர்வாக விவசாய பிரிவு    மற்றும் குரூப்  கேப்டன் நலின் டி சில்வா (ஓய்வு பெற்றவர்) அவர்களினால்  லங்கா பீ ஹனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம் விமானப்படை ஊழியர்களுக்கு தூய்மையான, சத்தான இயற்கை தயாரிப்புகளை அனுபவிக்கவும், நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை பாதுகாக்கவும் உதவும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை