2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை தடகள போட்டிகள்.
3:05pm on Thursday 28th November 2019
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை    தடகள  போட்டிகள்  கடந்த 2019 நவம்பர் 21 ம்  திகதி  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில்   வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்  கொழும்பு  மற்றும் ஏக்கல விமானப்படை அணியினர்   முறையே ஆண்  மற்றும் பெண்கள்  பிரிவில் வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை ஹிங்குரகோட மற்றும் தியத்தலாவ   விமானப்படை அணியினர்     முறையே ஆண்  மற்றும் பெண்கள்  பிரிவில் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை தரைப்படை   பிரிவின்   பணிப்பாளர்  எயார் வைஸ்  மார்ஷல் ரொட்ரிகோ  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார்  மேலும்  விமானப்படை  தடகள   சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் துய்யகொந்தா   மற்றும்   அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் வெற்றியாளர்கள்  விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை