பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விஜயம்.
12:31pm on Tuesday 11th February 2020
பாகிஸ்தான்  விமானப்படை  தளபதி  எயார் ஷீப் மார்ஷல்  முஜாஹித் அன்வர் கான்  மற்றும்  அவரது பாரியார்  திருமதி. தசீனா முஜாஹித் ஆகியோர்  கடந்த 2020 பெப்ரவரி  05 ம் திகதி  கட்டுநாயக்க  விமானநிலையத்திற்கு  வருகை தந்தனர்   அவர்களை  வரவேற்கும்  முகமாக   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும் திருமதி.  மயூரி பிரபாவி டயஸ்   ஆகியோர்  நேரில் சென்று வரவேற்றனர் .

அவர்கள் இங்கு தங்கி இருக்கும்  காலப்பகுதிகளில்   இலங்கை கடற்படை தலைமையகம், சீனவராய  விமானப்படை  கல்விப்பீடம் , கட்டுநாயக்க  பிரதான விமானப்படை தளம் , ரத்மலான  விமானப்படை  நூதனசாலை ,  மற்றும் கண்டி , நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு  பயணிக்கவுள்ளனர் .

மேலும்  இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின்  பிரதமர்  மற்றும்  முப்படை தளபதிகளையும்  சந்திக்கவுள்ளார் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை