இலங்கை விமானப்படை வரலாற்றில் மிகப்பெரிய கனரக போக்குவரத்து விமானக்கொட்டகை விமானப்படை தளபதியால் திறக்கப்பட்டது.
8:18pm on Wednesday 15th July 2020
இலங்கை விமானப்படை வரலாற்றில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய கனரக போக்குவரத்து விமானக்கொட்டகை கடந்த 2020 ஜூலை 01 ம் திகதி   விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  ரத்மலான  விமானப்படைத்தளத்தில்  திறந்துவைக்கப்பட்டது,

இந்த கனரக போக்குவரத்து விமானக்கொட்டகையை  ரத்மலான  விமானப்படைத்தளத்தில்  உள்ள இல 06   ஹெலிகொப்டர் படைப்பிரிவின்  61 வது  படையணியினரே பரிபாலித்து வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டில்  ரத்மலான  விமானப்படை தளத்தின் நிலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை  விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனத்திற்கு மொத்தமாக  ஒப்படைத்ததன் மூலம் விமானப்படை  விமானப்போக்குவரத்திற்கும்  மற்றும் விமான தரிப்பிடத்திற்குமான  ஒரு தேவைப்பாடு காணப்பட்டது  இதன்காரணமாக  விமனப்படையினால்  இந்த  கொட்டகை  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிர்மாணம்  சிவில் நிர்மாண  ஒப்பந்தத்தகர்களுடன்  இணைந்து  ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள எயர் பீல்ட்  கட்டுமான பிரிவினரும் சேர்ந்து  நிர்மாணிக்கப்பட்டது. இந்த  நிகழ்வில்  ரத்மலான  விமானப்படைத்தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும்  விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பளர்கள் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை