முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப்போட்டி - 2011
11:31am on Monday 24th October 2011
விமானப்படை முகாம்களுக்கிடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பலாலி விமானப்படை முகாமும் மகளிர் பிரிவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய முகாமும் சாம்பியன் பட்டம் வெற்றியீட்டியதுடன் போட்டியானது அம்பாரை விமானப்படை முகாமில் 22.09.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

எனவே இங்கு 17 விமானப்படைத்தளங்களில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட
வீரர்கள் பங்குபற்றியதுடன் போட்டியானது அம்பாரை விமானப்படை முகாமில் 18 திகதி முதல் 22 திகதி வரை இடம்பெற்றது. மேலும் இங்கு முதலில் ஆண்கள் பிரிவுக்கான போட்டியில் இலங்கை விமானப்படை பலாலி முகாமானது 15.91 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், பெண்கள் பிரிவுக்கான போட்டியில் பண்டாரநாயக சர்வதேச விமானநிலைய முகாமானது 6.418 புள்ளிகளை பெற்றுக்கொண்டமை விஷேட அம்சமாகும்.

எனவே இதில் ஆண்களுக்கான போட்டியில் பலாலி விமானப்படை முகாமின் ஜயரத்ன APGRP மற்றும் பெண்களுக்கான போட்டியில் கடுநாயக்க ஜெரிமன்ட் பிரிவின் நிஷ்சன்கா MAMP ஆகியோர் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படையின் தரைமார்க்க பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" மொஹான் சொயிசா அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் விமானப்படை பயிற்சிப்பிரிவு இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" கிஷான் யஹம்பத் மற்றும் அம்பாரை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை