2020 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை மொரவெவ விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
4:58pm on Tuesday 15th September 2020
2020  ம்  ஆண்டுக்கான  விமானப்படை தளபதி பரீட்சனை மொரவெவ   விமானப்படை தளத்தில்  கடந்த 2020 செப்டம்பர் 04  ம் திகதி  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இதன்போது  தளபதி அவர்களை  மொரவெவ  விமானப்படைதள  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் தர்மதாஸ     அவர்களின்  தலைமையில்  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன்  வரவேற்கப்பட்டார் .

அதன்பின்பு   கடந்த ஆண்டு சிறப்பாக சேவையை வழங்கிய  படைவீரர்களுக்கு  தளபதி விருதும் தளபதியினால்  வழங்கிவைக்கப்பட்டது   அதன் பெயர் விபரங்களை  ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

அதனை தொடர்ந்து படைத்தள அனைத்து பகுதிகளும்  படைப்பிரிவுகளுக்கும்  தளபதி விஜயம் மேற்கொண்டு  பரீட்சணையை மேற்கொண்டார்   இறுதியில்    தளபதியினால்    உரை நிகழ்த்தப்பட்டது   இதன்போது கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவைசெய்த அனைவருக்கும் அனைவருக்கும்  நன்றி  தெரிவித்தார்    அதிகாரிகள் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டு இருந்தனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை