விமானப்படையின் 2021 ம் ஆண்டுக்கான கோல்ப் போட்டிகள் சீனக்குடா கோல்ப் மைதானத்தில்
6:31pm on Wednesday 28th April 2021
விமானப்படையின்  வருடாந்த 2021 ம் ஆண்டுக்கான கோல்ப்  போட்டிகள் கடந்த 2021  ஜனவரி மாதமா 23 ம் திகதி திருகோணமலை  சீனக்குடா  விமானப்படை  கோல்ப் மைதானத்தில்  இடம்பெற்றது .

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின்  அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால்  குணரத்ன அவர்கள் இந்த போட்டிகளின்  பிரதம அதிதியாக  கலந்துகொண்டார்  இந்த ஆண்டின் போட்டியை டயலொக் எண்டர்பிரைஸ் பிரதான அனுசரணையை வழங்கியது இதன் இணை அனுசரணையாளராக   அணிலான ஹோட்டல் நிறுவனத்தினரும்  இணைந்துகொண்டனர்.

‘ஹேண்டிகேப் விதிகள்’ கீழ்  சுமார் 82  வீரவீராங்கனைகள்  கலந்துகொண்டனர் இதில்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவர்களும்  கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த போட்டிகளில்  ஆண்கள் பிரிவில்  அதிகப்புள்ளிகளை பெற்று திரு. சஞ்சீவ ஆரியரத்ன அவர்களும் பெண்கள் பிரிவில் திருமதி. அனுஷா சேனாதீர அவர்களும்  வெற்றிபெற்றனர் இரண்டாம் இடத்தினை முறையே  திரு. ஜனக தெபுவானா மற்றும் திருமதி . நிலூ ஜயதிலக ஆகியோர் பெற்று கொண்டனர்.

இதனை முன்னிட்டு  ஈகிள்  பே வியூவ்   ரிசார்ட்ல்  ஒரு கலைநிகழ்வும்  இடம்பெற்றது இதன்போது  பாதுகாப்பு செயலாளர் அவர்களும்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களும்   பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன அவர்களும்   விருது வலனாகும் வைபவத்தில்  இணைந்துகொண்டனர் மேலும் எயார் ஷீப்  மார்ஷல் (ஓய்வு) ஜயலத் வீரக்கோடி, எயார் ஷீப் மார்ஷல் (ஓய்வு) கோலித குணதிலக மற்றும் விமானப்படை முன்னாள் தளபதிகளான எயார் ஷீப்  மார்ஷல் (ஓய்வு) ககன் புலத்சிங்கள ஆகியோரும்  2021 ம் ஆண்டுக்கான  விமானப்படை தளபதி கிண்ண நிகழ்வில்   பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை