காடுகளை மீண்டும் உருவாக்கும் விமானப்படையின் 04 வது வேலைத்திட்டம்
2:02pm on Thursday 29th April 2021
இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்   தலைமையின்கீழ்   இலங்கை  விமானப்படையினர்  தீவிரமாக செய்துவருகின்றனர் . அந்த வகையில்  வான் வழி மூலம்   விதைக்குண்டு வீச்சி திட்டம் ஒன்றை 04 வது  முறையாக விமானப்படையின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு  70,000  விதைக்குண்டுகள்   கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 14 ம் திகதி  அம்பாறை லகுகள தேசிய  வனப்பிரதேசத்தில்  வானின் இருந்து வீசப்பட்டன  

வன அபிவிருத்தி திணைக்களம் மற்றும்   பேராதெனிய  பல்கலைக்கழகம்  என்பன இந்த திட்டத்தில் ஒன்றுசேர்ந்து செயட்பட்டுள்ளது என்பது விசேடமாகும்.

இந்த திட்டம்  இலங்கையில் ஒரு நிலையான வளர்ச்சிக்கான  இலக்காக இருக்கும்  2030 ஆம் ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை  27% முதல் 32% ஆக உயர்த்துவதே இதன்  முதன்மை நோக்கமாகும்.

இதன்போது இலங்கை விமானப்படையின் எம்ஐ -17 ஹெலிகாப்டர் உதவியுடன் கிட்டத்தட்ட70000விதைகுண்டுகள்  சுமார் 60  ஏக்கர் நிலப்பரப்பில்  தெளிக்கப்பட்டன. இதன்போது 06 வகையான மரவிதைகள்  உள்ளடங்குகின்றன  சரக்கொன்றை , இலுப்பை , மருது ,வாகை ,  தான்றி , புளியமரம் ஆகியன உள்ளடங்குகின்றன.

இந்த திட்டத்திற்கு விமானிகளாக விங் கமன்டேர் சில்வா  மற்றும் துணை விமானியாக பிளைன் ஆஃபீஸ்ர்  சந்த்ராசேகர ஆகியோர் செயற்பட்டனர்.  விமானப்படை வேளாண்மை பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்கள் இந்த செயற்பாட்டில் கலந்துகொண்டார் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை