73 வது சுதந்திர தினத்தில் பெருமிதத்துடன் இலங்கை விமானப்படை கலந்துகொண்டது.
11:30am on Sunday 20th June 2021
அந்நிய நாட்டவர்களின் காலனித்துவ ஆட்சியில் இருந்து எமது இலங்கை நாடானது சுதந்திரம் பெற்று 73 வருடங்கள் நிறைவையொட்டி  இலங்கையின் தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 2021 பெப்ரவரி  04ம் திகதி இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையின்கீழ் கொழும்பு  சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.  

இந்த வருடம்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் இந்த வருட சுதந்திரதின நிகழ்வில்  விமானங்கள் மற்றும்  விமானப்படை அங்கத்தவர்களின் அணிவகுப்புகள் இடம்பெற்றன. இதன்போது 24 விமானங்கள் மற்றும் 700 விமானப்படை அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் .

இதன் ஆரம்ப நிகழ்வுகள்  அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும் அவரின் பாரியாரின் வருகையுடன் இடம்பெற்றது  மேலும் இந்த நிகழ்வில் கௌரவ பிரதமர் ,  பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் , தலைமை நீதியரசர்கள் , மற்றும் பிரமுகர்கள் , மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி ஏயார்போர்ஸ்  ரோஷன் குணதிலக  மற்றும் அட்மிரல் ஒப் தி பீலிட் வசந்த கருணாகொட , முப்படை பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா  கடற்ப்படை தளபதி வைஸ் அட்மிரல் உளுகேதென்ன விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன  ஆகியோர் பங்குபற்றினர்.

இதன்போது  ஆரம்ப நிகழ்வாக  ஜனாதிபதி அவர்களினால்  தேசிய கோடி ஏற்றப்பட்டு அதன்பின்பு  ஜெயமங்கள கீதம் இசைக்கப்பட்டது  அதனை தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்புக்கள் ஆரம்பமானது  விமானப்படை சார்பாக  அணிவகுப்பு நிகழ்வில்  விமானப்படை விமானங்கள் வான் வழிமூலமும் விமானப்படை படைப்பிரிவின் மற்றும் வாகனப்பேரணிகள்  என்பன  ஜனாதிபதி முன்னிலையில் அணிவகுத்து சென்றனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை