கடுநாயக்க விமானப்படை முகாமின் இப்தார் நிகழ்வு.
6:30am on Tuesday 30th July 2013
 புனித ரமழான் மாத நோன்பு திறக்கும் நிகழ்வு (இப்தார்) நிகழ்வொன்று அண்மையில் இலங்கை  விமானப்படை கடுநாயக்க முகாமினில் அதன் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" எஸ்.கே. பதிரன அவர்களின் தலைமையில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வு மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தினை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்டதுடன் ,அங்கு வருகை தந்த மொளலவி அவர்கள்  மூலம் இலங்கை விமானப்படையின் அனைத்து அங்கத்தவர்களுக்காகவும் , மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர்நீத்த வீரர்களுக்காகவும், நமது தாய் நாட்டிற்காகவும் வேண்டி இறைவனிடம்  பிராத்தனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் ஏனைய கட்டளை அதிகாரிகள் உட்பட ,விமானப்படை முஸ்லிம் உருப்பினர்களும் கலந்துகொண்டமையும் விஷேட அம்சமாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை