இந்திய விமானப்படை தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
4:11pm on Sunday 16th January 2011
இந்திய விமானப்படை தளபதி 'எயார் சீப் மார்ஷல்' பிரதீப் வாசண்ட் நாயிக் இன்று (2011.01.16) ஞாயிற்றுக்கிழமை நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.

இவரை பன்டாரனாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை கூட்டுப்படைகளின் பிரதானியும், விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக வரவேற்றார்.

மேலும் விமானப்படை இணைப்பாளர் 'எயார் கொமதோர்' விவேக் ராம் சன்தாரி, 'ஸ்கொட்ரன் லீடர்' சங்கீத் கதைக் (எ.டி.சி) மற்றும் இந்திய விமானப்படை தளபதியின் பாரியார் திருமதி மதுபாலா நாயிக் அவர்களும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய விமானப்படை தளபதி 'எயார் சீப் மார்ஷல்' பிரதீப் வாசண்ட் நாயிக் இலங்கை முப்படைத்தளபதிகளின் பிரதானி அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்திக்க உள்ளார். மேலும் இவர் பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷ, வெளிவிவகாரச் செயலாளர் மற்றும் முப்படைத்தளைபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அத்துடன் இலங்கை விமானப்படையின் 'பிளைன்' பிரிவுகளையும் பார்வையிடவுள்ளார்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை