இலங்கை கிரிக்கெட் அணி ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டது.
8:26am on Monday 21st February 2011
இலங்கை கிரிக்கெட் அணியினர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பங்கேற்பதற்காக வேண்டி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து 18.02.2011 ம் திகதியன்று ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டனர்.

இவர்கள் விமானப்படைக்கு சொந்தமான M.I. 17 எனும் இரு காற்றாடி விமானங்கள் மூலம் ஹம்பாந்தோட்டை நோக்கி புறப்பட்டு சென்ற அதேநேரம் ,இவர்களுக்கான முதற்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கனடா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர்களை விமானப்படையின் சுகாதார இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" N.H.குணரத்ன மற்றும் விமான ஒழுங்கமைப்பு இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" கோலித குணதிலக ஆகியோர் அன்புடன் வரவேற்ற அதேநேரம் 28வது ரெஜிமென்ட் பிரிவின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" அதுல நானயக்கார ,இலங்கை கிரிக்கெட்அணியின் உப-தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார் ,இங்கு அணித்தலைவர் குமார் சங்கக்கார வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேபோன்று இவர்கள் அனைவரும் விமானப்படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் உற்சாகமூட்டி அனுப்பிவைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை