112வது ஆளில்லா விமானப்பிரிவின் நிறைவாண்டு விழா
4:10pm on Wednesday 8th June 2011
வீரவில விமானப்படை முகாமின் 112வது ஆளில்லா விமான ஊர்திப்பிரிவின் 3வது நிறைவாண்டு விழா கடந்த 01.06.2011ம் திகதியன்று அனைத்து உருப்பினர்களினதும் பங்குபற்றுதலுடன் நடைப்பெற்றது.

மேலும் இப்பிரிவானது கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பெறும் பங்காற்றிய அதேநேரம் இவ்விமானமானது யுத்த நடவடிக்கைகளின் போது தேவையான தகவல்களை விமானப்படைக்கு மட்டுமல்லாது தரைப்படை மற்றும் கடற்படைக்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்போது இப்பிரிவானது ஹம்பாந்தோட்டை துறைமுகம் ,மத்தளை விமான நிலையம் மற்றும் கொழும்பு அபிவிருத்தி திட்டங்களுக்கும் உதவிவருகின்றமை விஷேட அம்சமாகும்.

அத்தோடு வீரவில முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" மொகான் பாலசூரிய இதன் கட்டளை அதிகாரியாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை