விமானப்படைத்தளபதியின் புரூனை விஜயம்.
6:04pm on Monday 25th July 2011
ஜூலை 4 முதல் 8ம் திகதி வரை புரூனையில் இடம்பெற்ற தாருஸ்ஸலாம் பாதுகாப்பு கண்காட்ச்சியில் கலந்து கொள்வதற்காக புரூனை விமானப்படைத்தளபதி பிரகேடியர் ஜென்ரல் ஹாஜி ஜெப்ரி பின் அப்துல்லா அவர்களின் அழைப்பிதலை ஏற்று இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மாஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

எனவே விமானப்படைத்தளபதி பந்தார் ஷீ பகவான் சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்ததை அடுத்து பெரும் வரவேற்புடன் வரவேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்த கண்காட்ச்சியானது எதிர்காலத்தில் பாதுகாப்புக்கு தேவையான தொழிநுட்பம் எனும் தொனிப்பொருளில் புரூனை நாட்டின் எஜமான் ஹஸன் அல் பொல்காய் மற்றும் இளவரசர் ஹாஜி முத்தாதி  பில்லாக் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இக்கண்காட்ச்சியின் போது விமானப்படைத்தளபதி முன்னர் இலங்கை விமானப்படையுடன் இணைந்து சேவையாற்றிய தொழிநுட்பவியளாலர்களுடன் உரையாற்றிய அதேநேரம் பின்னர் புரூனை விமானப்படைத்தளபதியுடன் உரையாற்றிய பின் இருவருக்குமிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாரப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் அவர் இக்கண்காட்ச்சியில் இடம்பெற்ற கோல்ப் காட்ச்சிக்கூடத்திலும் பங்குபற்றிய அதேநேரம் கோல்ப் விளையாட்டிலும் ஈடுபட்ட அதேநேரம் இவ்விஜயத்தின் போது கூட்டுப்படைகளின் பிரதானி மற்றும் இலங்கை தரைப்படை கட்டளை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை