இலங்கை விமானப்படை பேண்ட் வாத்திய குழுவினர் மற்றும் நடனக்குழுவினரின் இந்தியா சுற்று பயணம்
9:16am on Wednesday 24th October 2018
இலங்கை விமானப்படை பேண்ட் வாத்திய குழுவினர் மற்றும் நடனக்குழுவினரின்  இந்தியா விமானப்படை தினத்தினை  முன்னிட்டு   இந்தியா சுற்று பயணம்  ஒன்றை  மேட்கொண்டு  கடந்த 2018 அக்டோபர் 07ம் திகதி மீண்டும் நாடு திரும்பி உள்ளார்கள்.

இந்திய  விமானப்படை தளபதி எயார் ஷீப்  மார்ஷல்  பீரிந்த்ர சிங்  தனோஆ  அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  இலங்கை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  அவர்கள் இந்தியா சுற்று பயணத்தை  ஏற்பாடு செய்து இருந்தார்   இந்த குழுவில்  06 விமானப்படை அதிகாரிகளும் 39 விமானப்படை வீரர்களும் 18 விமானப்படை  பெண்படையினரும்  களந்து கொண்டனர் இவர்கள் ஜோர்ஹட் , பெங்களூர் , நாக்பூர் ,ஜோத்பூர் , அதனை தொடர்ந்து மீண்டும் 2 முறை நியூ டெல்லியில்   அவர்களுடைய நிகழ்ச்சியை நடத்தினர்.

நியூ டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வை  பார்வை இட்ட  விமானப்படை தளபதி  அவர்கள் இலங்கை விமானப்படை  பேண்ட் வாத்திய குழுவினர் மற்றும் நடனக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார் இந்த நிகழ்வில்  இந்தியா விமானப்படை  வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்  சிவில் ஊழியர்களை   பொது மக்கள் ஆகியோர் களந்து கொண்டனர் 12 நாட்களாக இந்த சுற்றுப்பயத்தின் இறுதி நிகழ்வானது  நாக்பூரில் இடம்பெற்றது இந்த நிகழ்வை  முகப்புத்தகத்தில் பார்க்க முடியும்.


  இந்தியா
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை