விமானப்படை திறந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - 2018
2:17pm on Sunday 4th November 2018
இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்த 13 வது திறந்த ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இந்த போட்டியின் இருதி  நிகழ்வு  இலங்கை ரத்மலானை விமானப்படை ஸ்குவாஷ் காம்ப்ளக்ஸ்ல் நேற்று (27 அக்டோபர் 2018) வெற்றிகரமாகஇடம்பெற்று  முடிந்தது.
ரவிந்து லக்சிறி  மற்றும் பத்தும் இஸ்ஸதீன்   ஆகியோர் முறையே ஆண் பெண்  வெற்றியாளர்களாக  தெரிவு செய்யப்பட்டனர். இந்த போட்டி நிகழ்வு   9, 13, 15, 17, 19, வயது 35, 45 மற்றும் 50 வயதிற்குட்பட்ட வயதில் சாம்பியன்ஷிப் போட்டியாளர்கள் களந்து  கொண்டனர். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திறந்த நிகழ்ச்சியாகும்.

இந்த போட்டியில்   பிரதம அதிதியாக  வான்படையின்   பாதுகாப்பு  உயர்பீட  அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  கே எப் ஆர்  பெர்னாடோ  அவர்களும்  விமானப்படை  ஸ்குவாஷ்   விளையாட்டு   தலைவர்  எயார் கொமாண்டர் கொடகே  அவர்களும்   ரத்மலான விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி  எயார் கொமாண்டர்   ஆர் எஸ்  விக்கரமரத்ன அவர்களும் இலங்கை ஸ்குவாஷ் விளையாட்டு பிரிவின் தலைவர்   எயார் கொமாண்டர்  அபேயசேகர  ( ஓய்வு ) அவர்களும் மற்றும்  அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை