விமானப்படை தளபதி அவர்கள் முப்படையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரமற்ற அதிகாரிகளின் கருத்தரங்கு நிகழ்வில் களந்து கொண்டார்
4:20pm on Monday 10th December 2018
2018 ம் நவம்பர் 26 ம் திகதி முப்படைகளின்  வரொண்ட்  அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகரிமற்ற அதிகாரிகள்  2000 ம் மேட்பட்டோர் களந்துகொண்ட''தொழில்முறை கடமை'' கருத்தரங்கு நிகழ்வு    ஈகிள்ஸ் லாக்கிஸைட் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பாதுகாப்புக்காக  முப்படைவீரர்களுகம் ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் இணைந்து  செயட்பட்டனர்  அவர்களின்  தொழில்முறையை மேம்படுத்தும் நோக்கில்  ஒருநாள் கருத்தரங்கு  ஏட்பாடு செய்யயப்பட்டு இருந்தது   இதன் மூலம்  அவர்களின் அவர்களின் பணி, பொறுப்புகள், பரஸ்பர நடவடிக்கைகள், திறன், தலைமை திறன்கள், தொழில்முறை நடத்தை மற்றும் பொறுப்புணர்வு பிரச்சினைகள் ஆகியவற்றில் ஆற்றல் விருத்திக்காக  கருத்தரங்கு மூலம்  பெற்றனர்.

இலங்கையின் முப்படை கட்டளை இடும் தளபதி இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் தலைவர் அதிமேதகு   ஜனாதிபதி  மைத்திரி பால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர்  ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களும்  முப்படை பிரதானி அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்தன மற்றும் இராணுவப்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கமற்றும் கடற்படை  தளபதி வைஸ் அட்மிரல் ஸ்ரீமேவன் ரணசிங்க மற்றும்  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து முப்படை தரப்பினருக்கும் சான்றுதல்  வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை