இல .12 பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரி அதிகாரிகளின் பட்டமளிப்பு விழா
11:38am on Thursday 27th December 2018
சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும்  பதவிநிலை கல்லூரியில்  பட்டப்படிப்பை  நிறைவு செய்த அதிகாரியின் பட்டமளிப்பு வைபவம்  கடந்த 2018  டிசம்பர்  12 ம் திகதி இடம்பெற்றது  நிகழ்வின் பிரதம அதிதியாக அதிமேதகு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களின்  தலைமையில்  இடம்பெற்றது . 

இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் 68 பேரும்  கடற்படை அதிகாரிகள் 27 பேரும்  விமானப்படை அதிகாரிகள் 27 பேரும்  வெளிநாட்டு அதிகாரிகள் 14 பெரும் மொத்தமாக 136 அதிகாரிகள் இந்த பட்டபடிப்பை நிறைவு செய்தனர்.

இந்த நிகழ்வில் முப்படை பிரதானி அட்மிரல்  ரவீந்திர  விஜேகுணவர்தன விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி     இராணுவ, கடற்படை தளபதிகள் மற்றும்    பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும்  பதவிநிலை கல்லூரி அதிகாரிகள்  மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர்   கொண்டனர்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை