இலங்கை விமானப்படையினால் ''திரிபீடகாப்பிவந்தன '' எனும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3:30pm on Wednesday 24th April 2019
2300 வருடங்களாக   பௌத்த துறவிகளால்  பௌத்தர்களாலும்  அரசர்களாலும்  பாதுகாத்து வரப்பட்ட திரிபீடாக புனித நூலானது இலங்கை நாட்டின்  தூயமையான பாரம்பரியமாக பேணப்பட்டு வந்தது.

இந்த பௌத்த சமய பாரம்பரியத்தை  பாதுகாக்கும் வேலைத்திட்டம் எமது நாட்டின் ஜனாதிபதி கௌரவ அதிமேதகு  மைத்திரி பாலா சிறிசேன அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் எமது நாட்டின்  ஒரு முக்கிய தருணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கையை   பௌத்த மத்தியதளமாக   பிரகடனப்படுத்தியன் பின்  இலங்கை நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு  மைத்திரி பால  சிறிசேன அவர்களினால் அந்த சந்தர்ப்பத்தில்  இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் உரித்தான  நூலக திரிபீடகம்  பிரகடனப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இலங்கை  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜெயம் ஜயம்பதி அவர்களின் வழிகாட்டலின் கீழ்  ''திரிபீடகாப்பிவந்தன '' எனும் வேலைத்திட்ட நிகழ்வுகள் வாரம் முழுவதும் பல்வேறு இடம்களில் இடம்பெற்றன.

அனைத்து விமானப்படை  தளங்கள் மற்றும்  பௌத்த கொடிகளை பறக்க விடப்பட்டதோடு  மார்ச் 22 ம் திகதி  பத்தரமுல்லை விமானப்படை பிராந்திய பகுதியில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் புத்தர் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது.


தினியாவல பாலித தேரர் அவர்களின் தலைமையில்  பௌத்த பிக்குகள் பலரின் பங்கேற்பில்  பிரித் கூறப்பட்டு இந்த  புத்தர் சிலை வைக்கப்பட்டது பத்தரமுல்லை விமானப்படை பிராந்திய கட்டளை அதிகாரி  விங் கமாண்டர்  அமரசிங்க்கே அவர்களின் தலைமயில்  விமானப்படை பிராந்திய படை வீரர்களினால் இந்த  நிகழ்வு ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதன் போது  விமானப்படை  தலைமை அதிகாரி மற்றும் விமானப்படை  பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.



SLAF Station Colombo


SLAF Station Diyathalawa


SLAF Station Morawewa



SLAF Station Palaly


Academy China Bay


SLAF Station Mirigama


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை