இலங்கை விமானப்படை ரக்பி அணி வெற்றி
2:16pm on Tuesday 9th August 2011
கடந்த 05.08.2011ம் திகதியன்று திம்பிரிகஸ்யாய பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைப்பெற்ற ரக்பி போட்டியில் இலங்கை விமானப்படை அணி 40- 18 எனும் புள்ளி வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

எனவே இங்கு முதற்சுற்றில் விமானப்படை அணியின் ராதிக ஹெட்டியாரச்சி மற்றும் சானக சந்திமால் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தினால் 20 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் பொலிஸ் அணி 10 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

மேலும் இரண்டாம் சுற்றில் விமானப்படை அணி மேலும் சிறப்பாக விளையாடி 20 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் இறுதியாக விமானப்படை 40- 18 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியினை சுவிகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு இந்நிகழ்வில் இலங்கை விமானப்படை தரைமார்க்க படைப்பிரிவின் இயக்குனர் "எயார் கொமடோர்" லால் பெரேரா , விமானப்படை ரக்பி கழகத்தின் தலைவர் "எயார் கொமடோர் " விஜித குணரத்ன ,விமானப்படை விளையாட்டுத்துறை கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ஹர்ஷ பெர்னான்டு , செயளாலார் " விங் கமான்டர்" தீப்தி ரவிகன்ஷா  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை