2019 ஆண்டுக்கான விமானப்படையின் வான் மாநாட்டின் இறுதி நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
11:40am on Thursday 7th November 2019
இலங்கை விமானப்படையின்  05  வது கொழும்பு  வான் மாநாட்டின்  இரண்டாம் கட்ட நிகழ்வு   கடந்த 2018 அக்டோபர்  25 ம் திகதி  ரத்மலான  ஈகிள்ஸ் லாக்கடைட் பேங்கட் & மாநாட்டு மண்டபத்தில்   நிறைவுக்கு வந்தது.

இதன்  02 ம் நாள் நிகழ்வு  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களின் பங்கேற்பில்  இடம்பெற்றது.

இரண்டாம் நாள் அமர்வின்  போது  02 கருத்தரங்குகளாக  04 பேச்சாளர்கள்  மூலம்  கருத்துக்களும் விளக்கஉரைகளும்  அளிக்கப்பட்ட்டது. அன்றைய முதல் அமர்வில்   "தனிப்பயன் விளம்பரம்" எனும் தலைப்பில்  கலாநிதி   திரு.ஹரிந்தா விதானகே அவர்களினால்  விரிவுரை அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட அமர்வில்  '' வான் இராஜதந்திரத்தை ஊக்கமளித்தல் '' எனும் தலைப்பில்   பேராசிரியர்  சானு கைனிகார  அவர்களினால்  விரிவுரை  அளிக்கப்பட்டது. அன்றைய முதல் அமர்வின் பேச்சாளர்களாக  வீரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பி.ஆர்.வனிகசூரியாவும், மற்றும்   கருத்தரங்கின் இறுதி அமர்வில் ஜார்ஜ்  ஐ.எச். குக் மற்றும் கேர்ணல்  ஏ. வாலண்டினோவிச் ஆகியோரினால்  விளக்கவுரைகள் அளிக்கப்பட்டது.

சுருக்கமாக, 2019 கொழும்பு வான்  மாநாட்டில், 12 குழு உறுப்பினர்கள் தங்கள் ஆராய்ச்சி அறிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிகழ்வின்  இறுதி உரையை பாகிஸ்தானின் வடக்கு விமானப்படையின் விமானப்படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி எயார்  வைஸ் மார்ஷல் அப்துல் மொய்த் கான் நிகழ்த்தினார்.

இந்த   நிகழ்வில்  கலந்துண்டா அனைவருக்கும்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்   சான்றுதல்கள்  வழங்கிவைக்கப்பட்டது .

இறுதியாக  இந்த நிகழ்வின் நன்றி உறை  வான் மாநாட்டின் ஏற்பாட்டு  குழு  தலைவர்  எயார் கொமாண்டர்  ராஜபக்ஷ அவர்களினால்  நிகழ்த்தப்பட்டது  அத்துடன்  நிகழ்வுகள்  நிறைவு பெற்றது  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை