இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்.
11:48am on Monday 16th August 2021
விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால்  விமானப்படை யின்  புதிய தலைமை அதிகாரியாக  எயார்  வைஸ்  மார்ஷல்  பிரசன்ன பாயோ  அவர்கள்  கடந்த 2021  மார்ச் 09ம் திகதி  நியமிக்கப்பட்டார்.

எயார்  வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள்  இலங்கை விமானப்படையில் கடேட் அதிகாரியாக  பொது விமானிய 1985 ம் ஆண்டு இணைந்துகொண்டார்  அவர் தியத்தலாவ அடிப்படை போர்ப்பயிற்சி பாடசாலையில் அடிப்படை பயிற்சியையும்  விமானப்பயிற்சியை  சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்திலும் பாக்கிஸ்தான் விமானப்படை தளத்திலும் பெற்றுக்கொண்டார்.

பாகிஸ்தான் பயிற்சிகளின் பின்பு  இலங்கை விமானப்படையின் இல 04 ம்   ஹெலிகாப்டர் படைப்பிரிவில் கடமையாற்றினார் மேலும் நாட்டில் இடம்பெற்ற பயங்காதவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தனது பங்களிப்பையும் வழங்கி இருந்தார்   

இதுவரை சுமார் 7200 மணித்தியாலம்  வானில்  விமானியாக பறந்துள்ளார்   அவர்  கட்டு குருந்த மற்றும் கொழும்பு  ஆகிய படைத்தளங்களின் கட்டளை அதிகாரியாகவும்  இரண்டு சந்தர்ப்பங்களில்  சப்புகஸ்கந்த விங்கின்  பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி  வான் பிரிவில் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார்.

 விமானப்படையின் பிரதான படைத்தளங்களான  வவுனியா மற்றும் கட்டுநாயக்க ஆகிய தளங்களிலும்  கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றுள்ளார் அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக  ரஷ்ய கூட்டமைப்பிற்கு இலங்கை பாதுகாப்பு இணைப்பாக நியமிக்கப்பட்டது. 2019 ம் ஆண்டு  விமானப்படையின் பயிற்சி பணிப்பளராகவும்  அதனை தொடர்ந்து   வான் செயற்பட்டு பணிப்பாளராகவும்  தற்போது விமானப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்கின்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை