அம்பாறை விமானப்படை தளத்தில் பரசூட் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்த விமானப்படை அதிகாரி விபத்தில் உயிர் இழந்தார்.
3:21pm on Monday 16th August 2021
கடந்த 2021 மார்ச் 20 ம் திகதி  அம்பாறை விமானப்படை தளத்தில் பரசூட்  பயிற்சிகளில் ஈடுபட்ட 02 பரசூட்  வீரர்கள்   நேருக்கு நேர் சிக்குண்டு எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானர்  இதன்போது  உடனடியாக  வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதுடன் இதன்போது  ஸ்கொற்றன் ளீடர்  மனோஜ் பத்மதிலக  அவர்கள்  உயிர் இழந்தார் மேலும்  சார்ஜெண்ட்  அபயகோன் அவர்கள் படுகாயங்களுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40 -70 அடி உயரத்தில் இந்த பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்  காற்றின் திசை மாற்றத்தால் இந்த விபத்து இடம்பெற்றதாக  தெரியவந்துள்ளது.

நன்கு அனுபவம் மிக்க பரசூட்  வீரரான காலம்சென்ற  ஸ்கொற்றன் ளீடர்  மனோஜ் பத்மதிலக  அவர்கள்  2008 ஆகஸ்ட் 28 ம் திகதி  26  வது  கொத்தலாவல  பல்கலைக்கழத்தில்  விமானப்படை அதிகாரியாக இணைந்துகொண்டார்  பொல்கொள்ள  பிரதேசத்தை சேர்ந்த இந்த அதிகாரி கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவரும் ஆவார் இவர் திருமணமான ஓர் அதிகாரியாவார்.
இந்த விபத்து தொடர்பாக ஆராய விமானப்படை தளபதி அவர்கள் விசேட குழுவை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை