புதிய விமானப்படை தளபதிக்கு கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியினால் கௌரவமளிப்பு வைபவம்
3:56pm on Thursday 10th August 2023
புதிய விமானப்படை தளபதிக்கு கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியினால்   கௌரவமளிப்பு வைபவம்
இலங்கை விமானப்படையின் 19வது விமானப்படைத் தளபதியாக பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை கௌரவிக்கும் நிகழ்வு 2023 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதிஅவர் இடைநிலைக் கல்வியைப் பெற்ற  கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில்  நடைபெற்றது.

பண்டாரநாயக்க கல்லூரிக்கு வருகை தந்த விமானப்படைத் தளபதியை பண்டாரநாயக்க கல்லூரி அதிபர் வரவேற்றதுடன், கல்லூரி சாரணர்களால் வரவேற்கப்பட்டதையடுத்து, பண்டாரநாயக்க கல்லூரி கேடட்கள் புதிய விமானப்படைத் தளபதிக்கான மரியாதை  அணிவகுப்பை  நடத்தினர்.

பின்னர் விமானப்படை தளபதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்  கல்விச் செயற்பாடுகள் மற்றும் சாராத செயற்பாடுகளில் பங்காற்றியதன் மூலம் பெற்ற அனுபவங்களினூடாகவே இவ்வாறான வெற்றிகரமான பயணத்தை அடைய முடிந்ததாகவும்  அதேபோல் அனைத்து மாணவர்களும் கல்விச் செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு மற்றும் சாராத செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்தது  கடினமாக உழைத்து அவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்யுங்கள். என வலியுறுத்தினார்.

இந்த கௌரவிப்பு நிகழ்வின் இறுதியில் விமானப்படைத் தளபதிக்கு நினைவுப் பரிசில் அதிபரினால் வழங்கப்பட்டதுடன், விமானப்படைத் தளபதியினால் பாடசாலைக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், ஆசிரிய ஆசிரியைகள் , முன்னாள் மாணவர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை