விமான உதவி படைப்பிரிவின் ஆண்டுநிறைவை பள்ளிமாணவர்களுடன் கொண்டாடியது.
3:36pm on Wednesday 6th September 2023
விமான ஆதரவுப் பிரிவு (ASW) தனது 14வது ஆண்டு விழாவைக், 2023  ஆகஸ்டு 14 அன்று கொண்டாடியது.வானூர்தி மற்றும் பொது பொறியியல் துறைகளில் பறக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை விமானப்படையின் பொறியியல் திறன்களை மேம்படுத்தும் முதன்மை நோக்குடன் 2011 ஆம் ஆண்டு ரத்மலானை விமானப்படை தளத்தில் விமான ஆதரவு பிரிவு நிறுவப்பட்டது.இலங்கை விமானப்படையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக இந்த பிரிவானது ஆரம்பம் முதல் B-200, Y-12, PT-6, Bell 212/412 மற்றும் Cessna 150 போன்ற விமானங்களை பழுதுபார்த்து, நாட்டுக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நாணயங்களை சேமிக்கிறது.

ஆண்டு நிறைவு கொண்டாட்டத்துடன் இணைந்து, இரத்மலானை காதுகேளாதோர் பாடசாலையில் 11 ஆகஸ்ட் 2023 அன்று சமூகசேவை நலத்திட்டம்கள்  நடத்தப்பட்டதுடன், பாடசாலையின் பிள்ளைகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கைவிடப்பட்ட தளபாடங்கள் புனரமைக்கப்பட்டது.மேலும், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பிரிவின் அதிகாரிகள், அனைத்துப் பணியாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பங்கேற்புடன் ஒரு நட்பு கிரிக்கெட் போட்டியுடன் ஆண்டு விழா நிறைவடைந்தது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை