உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு குவானாபுர பகல்நேர பராமரிப்பு நிலையத்தின் அடிக்கல் நாடும் வைபவம்.
3:19pm on Wednesday 11th October 2023
உலக சிறுவர் தினத்துடன் இணைந்து, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி குவானபுர பகல்நேர பராமரிப்பு நிலையத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்த  நிகழ்வில் பிரதம அதிதிகளாக   விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பு விமானப்படை தளத்தில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையத்தை விரிவுபடுத்துவதும் மேம்படுத்துவதும் அதன் முதன்மை நோக்கமாக இருந்தது. வணக்கத்திற்குரிய மகா சங்கரத்ன அவர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு  விமானப்படைஅதிகாரிகள் , அவர்களது மனைவிமார்கள், கொழும்பு விமானப்படை தள கட்டளை அதிகாரி மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை