இந்திய கடற்படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சிக்காக கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது
12:07am on Friday 27th October 2023

இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த  2023 அக்டோபர் 19, அன்று  இலங்கை விமானப்படை தளமான கட்டுநாயக்கவை வந்தடைந்தது.இந்திய மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கான கடற்படை ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்கான பயிற்சியும் கூட்டுறவு பயிற்சி திட்டத்தின் மூலம் செய்யப்படும்

இந்த பயிற்சி வரிசைப்படுத்தலின் முதன்மை நோக்கங்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டருடன் விமானப்படை விமானிகளை அறிமுகப்படுத்துவதும், இணை விமானி அனுபவத்தை வழங்குவதும் ஆகும். மேலும், இலங்கை கடற்படையின் கப்பல்களில் தரையிறங்கும் பயிற்சிகளிலும் பயிற்சி குழு ஈடுபடவுள்ளது.

 2022 மார்ச் 23,இல் தொடங்கிய பயிற்சி முயற்சிகளின் விளைவாக இந்திய கடற்படையின் சுதேசி மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. முந்தைய பயிற்சியில் விமானப்படை விமானிகள் துணை விமானி பயிற்சியும், இலங்கை விமானப்படை வீரர்கள் கப்பல்களில் தரையிறங்கும் பயிற்சியும் பெற்றனர்.

 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை