இலங்கை விமானப்படைக்கு புதிய பிரதித் தளபதி நியமனம்
1:08pm on Sunday 29th October 2023
எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்க 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் இலங்கை விமானப்படையின் பிரதிப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதத்தை வழங்கினார். விமானப்படைத் தலைமையகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் படைத் தளபதிக்கு விமானப்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்தார்.

எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்க வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியில் கல்வி கற்று 1988 ஆம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் 6 வது உள்வாங்கல் மூலம் இலங்கை விமானப்படையில் சேர்ந்தார். 05 அக்டோபர் 1990 ஆம் ஆண்டு வழங்கல் கிளையில் பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


அவரது பதவிக் காலத்தில் அவர் கட்டுநாயக்க கமாண்டன்ட் இல. 01 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சியம்,

 ஹிகுரக்கொட முகாம் கட்டளை அதிகாரி இல. 02 வழங்கல் மற்றும் பராமரிப்புக் களஞ்சியம்,முதன்மை கொள்முதல் அதிகாரி,  பணியாளர் அலுவலர் வழங்கல்  ஏ,கட்டளை நல திட்ட அலுவலர், துணை இயக்குனர் வழங்கல் உட்பட பல நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.புதிய பிரதி தலைமை அவர்கள் , இலங்கை விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரியாக பதவியேற்பதற்கு முன்னர் இலங்கை விமானப்படையின் தளவாடங்கள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை