விமானப்படை சேவா வனிதா அலகின் ஆண்டுப் பொதுக் கூட்டம் - 2010
8:52am on Sunday 19th December 2010
விமானப்படை 'சேவா வனிதா' அலகின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 2010 டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி அன்று விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்காக விமானப்படையின் சேவா வனிதா அலகின் தலைவி திருமதி. நெலுன் குணதிலக பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் சேவா வனிதா அலகின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

அனுலா பெனான்டொ வீட்டமைப்பு திட்டம், ஆடை தொழிற்சாலை திட்டம், மருத்துவ திட்டம், பாலர் பள்ளி திட்டம், போன்ற பல பெருந்திட்டங்கலை சேவா வனிதா அலகின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.   

மேலும் இந்நிகழ்வில் “சேவா வனிதா” அலகின் புதிய குழு உறுப்பினர்ளை  தெரிவு செய்தலும் நடைப்பெற்றது. மூன்று தசாப்த காலங்களாக வடக்குக் கிழக்கு மக்களை பீடித்திருந்த, பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, வடக்குக் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்யிலைந்த மற்றும் உடல் ஊனமுற்ற விமானப்படை உறுப்பினர்களுக்கு நன்கொடை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விசேடம்சமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை