வானூர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் படை பிரிவு 2ஆம் ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடியது
1:20pm on Tuesday 16th May 2023
கட்டுகுருந்த விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  வானூர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தனது 2வது ஆண்டு விழாவை கடந்த  2023   ஏப்ரல் 30ம் திகதி பெருமையுடன் கொண்டாடியது. இலங்கை விமானப்படையில் வானூர்தி ஆராய்ச்சியின் முன்னோடியாக விளங்கும் AR&D பிரிவு, விமானம் மற்றும் விமானவியல் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் விமானப்படைக்கு தனது சேவையை வழங்கியுள்ளது. பல்வேறு பின்னணிகள் மற்றும் துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை வளர்ப்பதற்கான ஒரு நிறுவனமாக, எதிர்கொள்ளும் கோரும் சில சிக்கல்களுக்கு புதுமையான தீர்வுகளை வழங்குகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு அன்றய தினம் காலை அணிவகுப்பு  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் 

கேப்டன் அஷித ஹெட்டியாராச்சி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து எத்தகம அமரசேகர ஆரம்பப் பாடசாலையில் சமூக சேவை பொறுப்புணர்வு தொடர்பான செயற்றிட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை