வான் சாரண குழுவினரின் தியதலாவை விமானப்படை முகாமுக்கான விஜயம்
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த ,விஷேடமாக யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மாவட்ட மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வான் சாரணர் இயக்க மாணவர்கள் 07.02.2011 ம் திகதியன்று தியதலாவை விமானப்படை முகாமிற்கு பயிற்ச்சி நிமித்தம் வருகைதந்தனர்.

மேலும் இந்நிகழ்விற்காக 40 பாடசாலைகளைச்சேர்ந்த விஷேடமாக யாழ்ப்பாண மாவட்ட கொக்காவில் ஹிந்து கல்லூரி மாணவர்கள்  மற்றும் யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு முஸ்லிம் கல்லூரிகளைச்சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

இங்கு வருகைதந்த அனைவரையும் தியதலாவை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டென்'லங்கா கொடிப்பிலி  மற்றும் பயிற்ச்சிக்கான கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்'அநுரத்த விஜேசிரிவர்தன ஆகியோரால் வரவேற்கப்பட்டதோடு,இந்நிகழ்விற்காக விமானப்படையின் சாரண ஒழுங்கமைப்பு அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்"ஜினேந்திர ரனசிங்கவும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை