விமானப்படையின் உட்கட்டமைப்பு பிரிவின் நிறைவாண்டு விழா.
இலங்கை விமானப்படையின் உட்கட்டமைப்பு பிரிவானது தனது இரண்டாவது நிறைவாண்டு விழாவினை 01.04.2011ம் திகதியன்று கொண்டாடியதுடன், இதனை முன்னிட்டு விஷேட மத வழிபாடுகளும் இடம்பெற்ற அதேநேரம் இதனை கங்காராமை விகாரையின் மதிப்புக்குரிய கிரிந்த அசகி தேரேர் நடாத்திவைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இவ்விழாவுக்காக அதிகாரிகள் ,சிப்பாய்கள் உட்பட வினியோகப்பிரிவின் இயக்குனர் "எயார் கொமடோர்" S. ரம்புக்வெல்ல ,கொழும்பு விமானப்படையின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" NHV குணரத்ன மற்றும் வினியோகப்பிரிவின் ஏனைய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் மத வழிபாடுகளைத்தொடர்ந்து மஹரகம "மவுபிய செவன" முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்காக துணி வகைகள் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

மேலும் இப்பிரிவானது 2009ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன் ,இதனூடாக விமானப்படையின் அனைத்து விதமான கொடுக்கல் வாங்கல்களும் நிறைவேற்றப்படுவதுடன் அதாவது சமையல் பிரிவின் நடவடிக்கைகள் ,விமானப்படையின் உள்நாட்டு ,வெளிநாட்டு உட்கட்டமைப்பு பணிகள் ,விலைமனு கோரல் நடவடிக்கைகள்,மீள்நிர்மாணப்பணிகள்,விலைமதிப்பிடல் பணிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

அத்தோடு இப்பிரிவின் முதலாவது கட்டளை அதிகாரியாக "எயார் கொமடோர்" KAPS அநுலுகுகல நியமிக்கப்பட்டதுடன் தற்போதைய நிகழ்கால கட்டளை அதிகாரியாக "குறூப்கெப்டென்" WMKSP வீரசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம் இது 196 அதிகாரிகள் மற்றும் 139 சிப்பாய்களுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை