விமானப்படை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சாதனை
12:38pm on Saturday 9th April 2011
நீர்கொழும்பில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை கடுநாயக முகாமின் நலன்புரி எரிபொருள் நிரப்பு நிலையமானது  சிறந்த ஒழுங்கமைப்புக்கான போட்டியில் முதாலாவது இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் ,போட்டியானது 07.04.2011ம் திகதியன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே இங்கு பிரதம அதிதியாக பெற்றோலிய துறை அமைச்சின் மேலதிக செயளாலர் திரு .M.H.சன்திய விஜேய பண்டார அவர்கள் கலந்து கொண்ட அதேநேரம் வெற்றிக்கான பரிசினையும் அவரே  இந்நிரப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி "விங் கமான்டர் " ரஸிக பெல்லனகே அவர்களிடம் கையளித்தமை விஷேட அம்சமாகும்.

மேலும் இவ்வைபவமானது கொழும்பு-03ல் அமந்துள்ள "சஸவக" மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வுக்கு "குறூப்கெப்டன்" துஷாந்த ரத்னாயக , "ஸ்கொடரன் லீடர்" சிந்தக முதுதந்திரி மற்றும் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் திரு. R.C.விமலரத்ன ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை