ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான பாராட்டு வைபவம்.
"றோயல் சிலோன்" விமானப்படையின் முதல் நிர்வாக இயக்குனரான "குறூப் கெப்டென்" PG வல்பிட (01010) அவர்களின் 95வது பிறந்த நாளினை முன்னிட்டு விஷேட மதிய போஷன நிகழ்வு கொழும்பு விமானப்படை அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே  இங்கு  முன்னாள் விமானப்படைத்தளபதியான "எயார் சீப் மார்ஷல்" பெடி மென்டிஸ் மற்றும் இலத்திரனியல் பொறியியல் இயக்குனர்  "குரூப் கெப்டென்"  HAD ரணசிங்க  உட்பட தற்போதைய நிர்வாக இயக்குனரான " எயார் வைஸ் மார்ஷல்" ரோகித ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டார்.

அத்தோடு " குரூப்கெப்டன்" வல்பிட அவர்கள்  "றோயல் சிலோன் " விமானப்படைக்கு நேரடி அதிகாரியாக 04.04.1952ம் திகதியன்று விமானப்படையில் இணைந்துகொண்டதுடன் தனது 18 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்து கொண்டு 10.11.1970ம் ஆண்டு ஓய்வு பெற்ற அதேநேரம் இவர் பல்கலைக்கழக பௌதீகவியல் பட்டத்துடன் விமானப்படையில் இணைந்து கொண்ட இரண்டாவது பட்டதாரி அதிகாரியாவர் எனபதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை