இலங்கை விமானப்படையின் மருத்துவ முகாம்
கால்டன் "சுவ உதான" சுகாதார மற்றும் சமூக நலன்புரி நிகழ்ச்சி திடத்தின் கீழ் பெண்கள் நல மருத்துவ முகாமொன்று  29.04.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமில் இடம்பெற்றது.

எனவே இங்கு பிரதம அதிதியாக இலங்கையின்  முதற்பெண்மணி திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட  இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .நீலிகா அபேவிக்ரம அவர்களும் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

மேலும் இத்திட்டமானது திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய பெண்களின் குறிப்பாக விமானப்படை பெண் உறுப்பினர்களின் சுகாதார மற்றும் உடல் நலத்தினை மேம்படுத்துவதாக அமைந்திருந்த அதேநேரம்  இந்நிகழ்ச்சியானது  முற்றாக  இலவசமாக  இலங்கை விமானப்படை வைத்திய குழாமினாலும் , "வி.ஒ.ஜி."  ஹேமந்த தொடன்பால அவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு  இந்நிகழ்வுக்கு விமானப்படையின் சுகாதார இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்"  NH குணரத்ன , "எயார் கொமடோர்" சுனில் குணரத்ன  மற்றும் இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்"  சுமங்கள டயஸ்  போன்றோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை