பாலவி இல.05 வான்பாதுகாப்பு ரேடார் பிரிவின் 4வது நிறைவாண்டு விழா.
இல.05 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவின் 4வது நிறைவாண்டு விழா பாலவி விமானப்படை முகாமில் அண்மையில் இடம்பெற்றதுடன் ,இப்பிரிவானது 2007.05.24ம் திகதி தொடக்கம் எமது தாய் நாட்டின் வான்பாதுகாப்புக்கு பெறும் பங்களிப்பை அளித்து வருகின்றமை விஷேட அம்சமாகும்.

எனவே இவ்விழாவினை சரிவர கொண்டாடும் முகமாக  பாலவி முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" K.வன்னிகம ,இல.05 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" JMCR ஜயசுந்தர மற்றும் ஏனைய அங்கத்தவர்களும் அரிய பாடுபட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு பாலவி பௌத்த விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் , கடந்த 23.05.2011ம் திகதியன்று மர நடுகை நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன் ,அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை