
இனங்களுக்கு இடையில் நல்லினக்கத்தை ஏற்படுத்தும் முகாமாகவூம் வவூனியா கூட்டுப் படைத் தலைமையகத்தில் விமானப்படையின் கண்காட்சி மற்றும் திருவிழா நேற்று ஆரம்பிமானது. இந்த கண்காட்சியினை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந் நிகழ்வூகள் ஞாயிற்றுக்கிழமை வரை 03 தினங்கள் நடைபெறவூள்ளன. இதில் விமானப்டை வீரர்கள் பருசுட்டில் இருந்து குதித்தல் , தீ அணைத்தல் , விமானத்தின் பகுதிகளைகாட்சிப்படுத்தல் , விமான இயக்கம் பற்றி வெளிபடுத்தல் , விமானப்படையூடன் தொடர்புடைய பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விழா ஆரம்ப விழாவூக்கு விமானப்படை பனிப்பாளர்கள் , விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வவூனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.வி. வீரகோன் அவர்கள் உப்பட விமானப்படை அதிகாரிகள் கலந்நு கொண்டனர்.