வன்முறை விழிப்புனர்வு நிகழ்ச்சித்திட்டம்
வன்முறை விழிப்புனர்வு மற்றும் மன ஆரோக்கிய நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் கடுநாயக்க விமானப்படை முகாமினில் கடுநாயக்க மற்றும் ஏகல விமானப்படை முகாம்களில் வசிக்கும் பெண்களுக்காக ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது.

எனவே இந்நிகழ்ச்சியானது "பெண்களின் தேவை" என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததோடு இங்கு டாக்டர் . நிரோஷ மென்டிஸ் மன நோய் தொடர்பாக உரை நிகழ்த்தினார்.

அத்தோடு  இத்திட்டமானது இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்களின் கருத்துக்கு இணங்க அனைத்து முகாம்களிலும் நடாத்த இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் உட்பட கடுநாயக்க விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ரேனுகா குருசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை