விமனப்படையினால் முன்னர் பாவிக்கப்பட்ட விமானங்களின் மத்தியில் விமானப்படையின் 68 வது வருட நினைவுதின கொண்டாட்ட நிகழ்வு.
இலங்கை விமானப்படையின்  68 வது   நினைவுதின  கொண்டாட்ட நிகழ்வுகள்  ரத்மலான  அருங்காட்சியகத்தில்  விமானப்படையினரால்  முன்னர் பாவிக்கப்பட்டு  நிறுத்தி வைத்திருக்கும்  விமானங்கள் மத்தியில் வைத்து  கடந்த 2019 மார்ச் 10 ம் திகதி  இடம்பெற்றது .

இதன்போது  விமானப்படையின் முன்னாள் தளபதிகள், மற்றும்  விமானப்படை பணிப்பாளர்கள்  மற்றும்  அதிகாரிகள் , ஓய்வுபெற்ற அதிகாரிகள்    வாரண்ட் அதிகாரிகள் , விமானப்படை சிரேஷ்ட அதிகாரம் அற்ற அதிகாரிகள் ,  போன்றோர்  விமானப்படையின்  விமானங்கள் மத்தியில்  இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  எமது நாட்டின்  பாதுகாப்பு செயலாளர்  திரு. ஹேமசிறி பெர்னாண்டோ  அவர்கள் கலந்துகொண்டார் அவர்களை  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்கள் வரவேற்றார். மேலும்   முப்படை பாதுகாப்பு பிரதானி  அட்மிரல் ரவீந்திர  விஜேகுணரத்னே அவர்களும் அவரின் பாரியாரும் , இராணுவப்படை  தளபதி  லேப்ட்டினால் ஜெனரல்  மகேஷ் சேனநாயக்க அவர்களும் பாரியாரும் , கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பியால் தி சில்வா  ஆகியோர்  இந்த  நிகழ்வின் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

விமானப்படையின்  வர்ண அணிவகுப்பு படை பிரினால்  வர்ண அணிவகுப்பு நிகழ்த்தப்பட்டதோடு  விமானப்படையின்  தளபதிகளால்  ஒன்றிணைந்து  68 வது வருட விமானப்படையின்  நினைவு கேக்  வெட்டப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை