பூவரசங்குளத்தில் வன்னி விமானப்படை தளத்தினால் புதிதாக கட்டப்பட்ட தொழில் பயிற்சி மையத்தை ஒப்படைத்தல்.
11:37am on Thursday 1st August 2019
விமானப்படையினால்  புதிதாக கட்டப்பட்ட தொழிற்பயிற்சி மையம் 2019 ஜூலை 15 ஆம் திகதி இலங்கை விமானப்படை வன்னி ரெஜிமென்ட்  பயிற்சி பபாடசாலையின்  கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் கலுஆராச்சி அவர்களினால் வவுனியா தொழிற்பயிற்சி ஆணையகத்தின் துணை பணிப்பாளர்  வி.கனகசுந்தரம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமானப்படையின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிட வேலைதிட்டத்திற்கான நிதி  விநியோக நல்லிணக்கம்  பொறிமுறையைப் சார்ந்த ஒருங்கிணைப்பு செயலகத்தினால் அளிக்கப்பட்டது.

2018 அக்டோபர் 27 ஆரம்பிக்கப்பட்ட  இந்த  கட்டிட வேலை விமானப்படை  சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் 2019 ஜனவரி 06 ம் திகதி நிறைவுக்கு வந்தது.

இந்த நிகழ்வில் பிராந்திய விவகார ஒருங்கிணைப்பு பிரிவு பணிப்பாளர் திரு.சஞ்சீவ விமலகுணரத்ன அவர்களும் வன்னி ரெஜிமென்ட்  பயிற்சி பாடசாலையின்   அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை