விமானப்படை நீர்ப்பந்து அணியினர் பங்களாதேஸ் சுற்றுத்தொடரில் வெற்றி
1:00pm on Saturday 14th September 2019
இலங்கை விமானப்படை  மற்றும் பங்களாதேஸ் விமானப்படை  நீர் பந்து அணிகளுக்கிடையிலான    நட்பு போட்டித்தொடரில்   இலங்கை  விமானப்படை அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

16 பேர் கொண்ட  இலங்கை விமானப்படை  அணியினர்  கடந்த 2019  ஆகஸ்ட்  23 ம் திகதி   பங்களாதேஸ் பயணம் மேற்க்கொண்டிருந்தனர்  இந்த போட்டி 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி  பங்களாதேஷின் டாக்காவின் மிர்பூரில் உள்ள தேசிய நீச்சல் வளாகத்தில் நடைபெற்றது.3-2 என்ற கணக்கில் பங்களாதேஷ் விமானப்படைக்கு எதிரான போட்டியில்  இலங்கை விமானப்படை வெற்றிபெற்றனர் . இந்த  போட்டியில்  சிரேஷ்ட விமானப்படை வீரர்   சஞ்சய பிரேமரத்ன சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டர் .

வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இலங்கை விமானப்படை நீர்ப்பந்து அணியினர்  2019 ஆகஸ்ட் 31ம் திகதி  அன்று நாட்டுக்கு  திரும்பியது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை