
07 வது உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை வீராங்கனை கோப்ரல் லியனாராச்சி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கடந்த 2019அக்டோபர் 23 ம் திகதி சீனாவில் இடம்பெற்ற உலக இராணுவ விளையிட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை சார்பாக பங்குபற்றிய கோப்ரல் நிமாலி லியனாராச்சி 800 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார் .
இந்த போட்டியில் உக்ரைன், பஹ்ரைன், பார்படாஸ், கென்யா மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் உக்ரைன், பஹ்ரைன், பார்படாஸ், கென்யா மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
கோப்ரல் நிமாலி லியனாராச்சி வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் விளையாட்டு வீரர் பிரிஷெபா நடாலியா தங்கப் பதக்கத்தையும், பஹ்ரைனின் கோரிர் நெல்லி வெண்கலத்தையும் வென்றனர்.




