இலங்கை விமானப்படையின் 2019 ஆம் ஆண்டுக்கான மேஜிக் கிறிஸ்துமஸ் கரோல் கீதங்கள்.
விருந்தோம்பல்,பெருந்தன்மை, ஒருவருக்கொருவர் பகிர்வது, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுதல்,  ஏழை மக்களுக்கு உதவுவது அனைத்தும் "கிறிஸ்துமஸ் மேஜிக்" கொண்டாட அற்புதமான வழிகளாகும்.

இங்கை விமானப்படை சேவா வனிதா  பிரிவினால்  கடந்த 2019 டிசம்பர் 19 ம் திகதி ரத்மலான விமானப்படை தளத்தின் லேக்  சைட்  மாநாட்டு மண்டபத்தில்    கிறிஸ்துமஸ்  கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக பாதுகாப்பு செயலகத்தின்  சேவா வனிதா  பிரிவின் தலைவி சந்த்ராணி  குணரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர்  கமால் குணரத்ன   ஆகியோர் கலந்துகொண்டனர்  மேலும்   இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .மயூரி பிரபாவி டயஸ் மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் ஆகியோரும் விமானப்படை  முன்னாள் தளபதி மார்ஷல் ஒப்பி தி ஏயார்போர்ஸ்   ரோஷன் குணாதிலகே  ,இராணுவப்படை தளபதி லேப்ட்டினால் ஜெனரல் சாவென்ற சில்வா மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள்  படைவீரர்கள் அவர்களின் குடும்பத்தித்தினார்கள்  கலந்துகொண்டனர் .

தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக, திரு. எஷாந்தா டி ஆண்ட்ராடோ இந்த ஆண்டு விமானப்படை கிறிஸ்துமஸ் கரோல் கீதா கச்சேரிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியை ஸ்கொற்றன் லீடர் ரதிக ரணவீர மற்றும் ஸ்கொற்றன் லீடர்  லிலங்கி ரந்தெனி ஆகியோர் தலைமை தாங்கி  நடத்தினர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை