
சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 பெப்ரவரி 24 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சில்வா அவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் ஜிஹான் செனவிரத்ன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சில்வா அவர்கள் கடந்த 2017 ஜனவரி 31 ம் திகதி சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற மூன்று வருடங்கள் அந்த பாடசாலையை திறன்பட முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார்
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜிஹான் செனவிரத்ன அவர்கள் இதற்குமுன்னர் கொழும்பு விமானப்படை தளத்தில் ஊடகப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.




