
வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 206 பேர் வீடுதிரும்பினர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 260 பயணிகளை தனிமைப்படுத்தும் முகமாக விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 மார்ச் 17 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.
இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும் நேரடி மேட்ர்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டது. வன்னி தனிமைப்படுத்தல் மைய்யத்தினுள் 173 ஆண்கள் 33 பெண்கள் உட்பட ஒரு வெளிநாட்டு தம்பதிகள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.