இலங்கை விமானப்படை கடல் வழியாக சட்டவிரோத நுழைவை கண்காணிக்க வான்வழி கண்காணிப்பு நடவடிக்கைகளை நடத்துகிறது.
கோவிட் 19 நோய் பரவுவதால், பல நாடுகளைப் போலவே இலங்கையும் அனைத்து சர்வதேச விமானங்களையும் சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளதுடன், விமானம் அல்லது கடல் வழியாக நாட்டிற்குள் எந்தவொரு அங்கீகாரமற்ற நுழைவையும் தடுக்கும் பொறுப்பை ஜனாதிபதி விமானப்படை மற்றும் கடற்படைக்கு ஒப்படைத்துள்ளார்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் ஆலோசனை படி  விமானப்படை  வான்வழி செயற்பாட்டு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க அவர்களின்  மேற்பார்வையின்கீழ் இலங்கை கடல்படையுடன் இணைந்து இலங்கை சர்வதேச கடல் எல்லையில்  இலங்கை விமானப்படைக்கு சொந்தமான வை 12  விமானம் மூலம் இந்த ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இலங்கைக்கு விமானப்படை  கண்காணிப்புக்குழுவினால் சந்தேகத்திற்கிடமான கடல் குழுக்கள் மற்றும் புலம்பெயர்ந்த குழுக்கள் இலங்கைக்குள் நுழைய முயற்சிப்பதை  விமானங்கள் மூலம் அவதானித்து இலங்கை கடற்படை அறிவிக்கும்.

இலங்கைக்கு விமானப்படை  கண்காணிப்புக்குழுவினால் சந்தேகத்திற்கிடமான கடல் குழுக்கள் மற்றும் புலம்பெயர்ந்த குழுக்கள் இலங்கைக்குள் நுழைய முயற்சிப்பதை  விமானங்கள் மூலம் அவதானித்து இலங்கை கடற்படை அறிவிக்கும்.  இலங்கை விமானப்படை  மன்னாரில் இருந்து கன்கசந்துரை கடலோரப் பகுதிவரை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மேலதிக தகவல்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை பார்க்கவும்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை