
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் புதிதாக நிமாணிக்கப்பட்ட வான் தெற்கு வான் கட்டளை மற்றும் படைத்தள தலைமைக்காரியலாலயம் ஆகியன விமானப்படைத்தளபதியினால் திறந்துவைப்பு
கட்டுநாயக்க விமானப்படைத்தளமானது விமானப்படை வரலாற்று சிறப்பு மிக்க படைத்தளமாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும் தற்போது மீண்டும் ஒரு வரலாற்றை அப்படைத்தளம் படைத்துள்ளது.
இந்த கட்டிடதொதியில் தெற்கு விமானப்படையின் தெற்கு வான் கட்டளை செயற்பாடுகள் மற்றும் கட்டுநாயக்க படைத்தள செயற்பாடுகள் என்பன இங்கு இடம்பெறும்.
இந்த கட்டிடத்திற்க்கான வேலை செயற்பாடுகள் கட்டுநாயக்க படைத்தள கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா அவர்களின் துரித செயற்பாடுகளினால் கட்டுநாயக்க சிவில் பொறியியல் பிரிவினால் நிறைவுசெய்யப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் தலைமை தளபதி உட்பட பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.